கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் திங்கட்கிழமை (மே 1) பாரம்பரிய மே தின அணி வகுப்பை இரத்து செய்துள்ளது.
1959 புரட்சிக்குப் பிறகு பொருளாதார காரணங்களுக்காக மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது.
கியூபாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதுடன், சாரதிகள் பல நாள் காத்திருப்பில் உள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல், கியூபாவிற்கு தேவையான எரிபொருளில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கிடைக்கிறது என்று கூறினார்.
விநியோகஸ்தர்கள் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.