அரச மருத்துவமனைகளில் பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஹேரத் கூறுகையில், பல் நிரப்புதல், நரம்பு நிரப்புதல், எலும்பு மூட்டு சிகிச்சை, பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அந்த நிலை காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மருந்து தட்டுப்பாடு காரணமாக அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவியபோது, அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பல் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு - கடும் அவதிக்குள்ளாகும் நோயாளிகள் அரச மருத்துவமனைகளில் பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் செயலாளர் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஹேரத் கூறுகையில், பல் நிரப்புதல், நரம்பு நிரப்புதல், எலும்பு மூட்டு சிகிச்சை, பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.அந்த நிலை காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே மருந்து தட்டுப்பாடு காரணமாக அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவியபோது, அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.