• May 10 2024

யுக்திய நடவடிக்கையில் களமிறக்கப்பட்ட மோப்ப நாய்கள்...! தொடரும் தேடுதல் வேட்டை...!samugammedia

Sharmi / Jan 6th 2024, 4:21 pm
image

Advertisement

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நீதி நடவடிக்கையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாகனங்கள் மூலம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் வாகன உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவினர் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கையில் களமிறக்கப்பட்ட மோப்ப நாய்கள். தொடரும் தேடுதல் வேட்டை.samugammedia பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நீதி நடவடிக்கையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாகனங்கள் மூலம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.இந்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் வாகன உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவினர் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement