• May 20 2024

மின் அழுத்தியால் வந்த வினை - தாயின் தலைமுடியை பிடித்து தாக்கிய மகன் கைது!

Chithra / Feb 2nd 2023, 10:22 am
image

Advertisement

மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், அகலவத்தை – ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மகன் பேருந்து சாரதி என்பதுடன், மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு மின்அழுத்தியில் உடைகளை தேய்க்கச் சென்றுள்ளார்.

அதன்போது, ​​66 வயதான அவரது தாய், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் மின் அழுத்தியை பாவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மகன் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரான 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்

மின் அழுத்தியால் வந்த வினை - தாயின் தலைமுடியை பிடித்து தாக்கிய மகன் கைது மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், அகலவத்தை – ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மகன் பேருந்து சாரதி என்பதுடன், மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு மின்அழுத்தியில் உடைகளை தேய்க்கச் சென்றுள்ளார்.அதன்போது, ​​66 வயதான அவரது தாய், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் மின் அழுத்தியை பாவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மகன் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சந்தேகநபரான 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement