• Oct 29 2025

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம்; பொலிஸாரின் பிடியில் சிக்கிய இருவர்

Chithra / Oct 28th 2025, 6:59 pm
image


​திருகோணமலை ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த இருவரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

​அதுமட்டுமல்லாமல், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக சில கண்காணிப்பு மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளும் பிரதேசத்தில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

​எனவே, பாடசாலை விடுகின்ற நேரங்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் அப்பகுதிகளில் அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராகப் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம்; பொலிஸாரின் பிடியில் சிக்கிய இருவர் ​திருகோணமலை ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த இருவரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.​அதுமட்டுமல்லாமல், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக சில கண்காணிப்பு மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளும் பிரதேசத்தில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.​எனவே, பாடசாலை விடுகின்ற நேரங்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் அப்பகுதிகளில் அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராகப் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement