• Sep 21 2024

யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட அறிமுக நிகழ்வு!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 2:06 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் (பற்றிகொட்டா செமினறி) 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினரால் விசேட அறிமுக நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

காலை ஒன்பது மணியளவில் வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று, தொடர்ச்சியாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின்  பிக்னல் மெமோறியல்  மைதானத்தில் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் தலைமையில்  200ஆவது ஆண்டினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுவதோடவுள்ளது.

அதன்பின்னர் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட விசேட சின்னமும், கல்லூரியின் புதிய காலுறையும் (shocks), 200வது ஆண்டினை முன்னிட்ட ஜேர்சியும் (மேலங்கியும்) அறிமுகப்படுத்தபடவுள்ளது.

இதன்பொழுது வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராயர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம், யாழ். மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்,கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட அறிமுக நிகழ்வுSamugamMedia வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் (பற்றிகொட்டா செமினறி) 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினரால் விசேட அறிமுக நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணியளவில் வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று, தொடர்ச்சியாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின்  பிக்னல் மெமோறியல்  மைதானத்தில் கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம் தலைமையில்  200ஆவது ஆண்டினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுவதோடவுள்ளது. அதன்பின்னர் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட விசேட சின்னமும், கல்லூரியின் புதிய காலுறையும் (shocks), 200வது ஆண்டினை முன்னிட்ட ஜேர்சியும் (மேலங்கியும்) அறிமுகப்படுத்தபடவுள்ளது. இதன்பொழுது வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராயர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், கல்லூரியின் அதிபர் ருஷிறா குலசிங்கம், யாழ். மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்,கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement