அரச மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.