வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைத்தெறியப்பட்டும் களவாடப்பட்டும் நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் குறித்த சிலைகள் மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சமயத் தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள், அரசியற் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் மீள்பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறானதொரு நிலையில் இன்று(28) இரவும் ஆதி லிங்கேஸ்வரர் மற்றும் அவரோடு இணைந்த பரிவார தெய்வங்களுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.