பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்துகின்ற முதலாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டாலும் அவை எந்த சந்தர்ப்பத்திலும் உடனடியான செலவுகளுக்காக பயன்படுத்தவில்லை.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போதிய நிதியில்லாத காரணத்தினால், பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளதாகவும் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.