சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அடுத்த வருடம் முழுவதும் நடத்துவதற்கு தேவையான மசகு எண்ணெய் இருப்புக்களை கொள்வனவு செய்வதில் நம்பிக்கை இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 8 மசகு எண்ணெய் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில்,மேலும் 6 மசகு எண்ணெய் கப்பல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ச்சியாக இயக்குவதன் மூலம் 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் பல வாரங்களின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் சுத்திகரிப்பு நிலையம் முழு கொள்ளளவில் இயங்கி வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.