கடந்த சில நாட்களாக எமது நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் கடலரிப்புக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மூதூர் -தக்வாநகர் கரையோரப்பகுதியை , சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ) இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.
இதன்போது கரையோரத்திலுள்ள கிராம மக்களிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி ஜே.எம்.லாஹிர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.