உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவியில் இருந்து இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகவங்கியை மேற்கோளிட்டு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிதி முக்கிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் வளர்ச்சி இலக்குகளை ஆதரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.