சர்வதேச ரீதியான நியமங்களுக்கமைய நடைபெற்ற 'அபகஸ்' கணிதப்போட்டியில் முதலிடம் பெற்று ஜப்பான் நாட்டிற்கு செல்லும் தகுதியினைப் பெற்று நற்பிட்டிமுனை கிராமத்திற்கும், தான் கற்ற பாடசாலைக்கும் கீர்த்தியினைப் பெற்றுக் கொடுத்த மாணவி ஆர்.ஸைனப் தூபாவினை வீடு தேடிச் சென்று கௌரவித்த நிகழ்வொன்று (12.05.2023) நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.பைசால் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் , நற்பிட்டிமுனை வலய உதவி முகாமையாளர் யூ.எல்.தௌபீக், வங்கி உதவி முகாமையாளர் ஐ.றோசினி மற்றும் வங்கி/வலய உத்தியோகத்தர்களும் மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சர்வதேச ரீதியில் நடைபெற்ற கணிதப்போட்டியில் சாதனை படைத்த இலங்கை மாணவி - ஜப்பான் பயணம். samugammedia சர்வதேச ரீதியான நியமங்களுக்கமைய நடைபெற்ற 'அபகஸ்' கணிதப்போட்டியில் முதலிடம் பெற்று ஜப்பான் நாட்டிற்கு செல்லும் தகுதியினைப் பெற்று நற்பிட்டிமுனை கிராமத்திற்கும், தான் கற்ற பாடசாலைக்கும் கீர்த்தியினைப் பெற்றுக் கொடுத்த மாணவி ஆர்.ஸைனப் தூபாவினை வீடு தேடிச் சென்று கௌரவித்த நிகழ்வொன்று (12.05.2023) நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.பைசால் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் , நற்பிட்டிமுனை வலய உதவி முகாமையாளர் யூ.எல்.தௌபீக், வங்கி உதவி முகாமையாளர் ஐ.றோசினி மற்றும் வங்கி/வலய உத்தியோகத்தர்களும் மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.