• Sep 19 2024

இலங்கை தமிழ் பெண் ஜேர்மனியில் மர்மமான முறையில் உயிரிழப்பு! SamugamMedia

Chithra / Mar 5th 2023, 7:35 am
image

Advertisement

இலங்கை வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜேர்மனியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண் 12 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து ஜேர்மன் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

ஓரிரு வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து, தென்னிந்திய குடும்பம் ஒன்றுடன் வீட்டின் மேற் பகுதியில் தனிமையில் அவர் வசித்து வந்ததாக தெரியவருகின்றது.


இந்நிலையில் குறித்த பெண்ணின் உறவுக்காரர் ஜேர்மனியில் வசித்து வந்ததாகவும் அடிக்கடி அவர் உயிரிழந்த பெண்ணை சந்திக்க வருபவர் எனவும், இந்திய குடும்பத்தவர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழ் பெண் ஜேர்மனியில் மர்மமான முறையில் உயிரிழப்பு SamugamMedia இலங்கை வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜேர்மனியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த பெண் 12 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து ஜேர்மன் சென்றதாகவும் கூறப்படுகின்றது.ஓரிரு வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து, தென்னிந்திய குடும்பம் ஒன்றுடன் வீட்டின் மேற் பகுதியில் தனிமையில் அவர் வசித்து வந்ததாக தெரியவருகின்றது.இந்நிலையில் குறித்த பெண்ணின் உறவுக்காரர் ஜேர்மனியில் வசித்து வந்ததாகவும் அடிக்கடி அவர் உயிரிழந்த பெண்ணை சந்திக்க வருபவர் எனவும், இந்திய குடும்பத்தவர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement