இலங்கை சுற்றுலாத்துறை மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 169.9 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பானது, தற்போது நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் அந்நிய செலவாணி நெருக்கடிக்கு வழி வகுத்தது.
எனினும், ஒவ்வொரு வாரமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தொழில் துறையின் எதிர்காலம் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் வாய்ப்புகள் குறைவாகும்