• May 17 2024

பெறாமகளின் திடீர் மரணம்...! துக்கம் தாளாமல் சிறிய தாயும் உயிரிழப்பு...!தமிழர் பகுதியில் சோகம்...!samugammedia

Sharmi / Oct 4th 2023, 10:29 am
image

Advertisement

பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று அக்கரைப்பற்றில் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வந்த சுந்தரலிங்கம் கமலா எனும் 59 வயதான நான்கு பிள்ளைகளின் தாயார் கடந்த 01ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், மரணச்செய்தி அறிந்து வீட்டுக்குச் சென்ற 85 வயதுடைய அவரின் சிறிய தயார் அருளப்பு தங்கம்மா துக்கம் தாளாமல் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்புற்று ஆதார வைத்திய
சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்று முன்தினம் (02) மாலை உயிரிழந்த நிலையில் நல்லடக்கம் நேற்று (03) காலை அக்கரைப்பற்று இந்து மயானத்தில் இடம்பெற்றது.

உயிரிழந்த பெறாமகள் சிறுவயது முதல் சிறிய தாயாரே வளர்ந்து வந்த நிலையில், மகளின் மரணச் செய்தியின் தாக்கம் காரணமாக மறுகணமே சிறிய தாயாரும் உயியிழந்தமை  பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, உயிரிழந்த இருவரது  உடலங்களும் மயானத்தில் அருகருகே புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெறாமகளின் திடீர் மரணம். துக்கம் தாளாமல் சிறிய தாயும் உயிரிழப்பு.தமிழர் பகுதியில் சோகம்.samugammedia பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று அக்கரைப்பற்றில் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வந்த சுந்தரலிங்கம் கமலா எனும் 59 வயதான நான்கு பிள்ளைகளின் தாயார் கடந்த 01ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.இந்நிலையில், மரணச்செய்தி அறிந்து வீட்டுக்குச் சென்ற 85 வயதுடைய அவரின் சிறிய தயார் அருளப்பு தங்கம்மா துக்கம் தாளாமல் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்புற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்று முன்தினம் (02) மாலை உயிரிழந்த நிலையில் நல்லடக்கம் நேற்று (03) காலை அக்கரைப்பற்று இந்து மயானத்தில் இடம்பெற்றது.உயிரிழந்த பெறாமகள் சிறுவயது முதல் சிறிய தாயாரே வளர்ந்து வந்த நிலையில், மகளின் மரணச் செய்தியின் தாக்கம் காரணமாக மறுகணமே சிறிய தாயாரும் உயியிழந்தமை  பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இருவரது  உடலங்களும் மயானத்தில் அருகருகே புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement