யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பதாகவும் தமிழ் மக்களின் எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளையதினம் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளரான க.சுகாஸ் இதனை தெரிவித்திருந்தார்.
நாளை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக அனைவரையும் ஒன்றுகூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் 13ம் திருத்தத்திற்குள்ளே தீர்வு என்று ஜனாதிபதி கூறியிருப்பது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் க.சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் 90 வீதமானவை அரச காணிகள் என்றும் அரச காணிகளை விடுவித்துவிட்டு காணி விடுவிப்பு என்ற ஒரு மாயையை காட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்திய சுகாஸ்: நாளைய எதிர்ப்பு போராட்டத்திற்கும் அழைப்பு யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பதாகவும் தமிழ் மக்களின் எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளையதினம் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளரான க.சுகாஸ் இதனை தெரிவித்திருந்தார்.நாளை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக அனைவரையும் ஒன்றுகூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.நேற்று முன்தினம் 13ம் திருத்தத்திற்குள்ளே தீர்வு என்று ஜனாதிபதி கூறியிருப்பது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் க.சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் 90 வீதமானவை அரச காணிகள் என்றும் அரச காணிகளை விடுவித்துவிட்டு காணி விடுவிப்பு என்ற ஒரு மாயையை காட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.