• Apr 02 2025

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள்; பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா? நிபுணர்கள் விளக்கம்

Chithra / Mar 31st 2025, 12:26 pm
image


கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கங்களிலிருந்து தாங்கும் சக்தி கொண்டது. ஏனெனில் அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன என  நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின்  அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.

இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.

சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. 

மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையான உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள்; பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா நிபுணர்கள் விளக்கம் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கங்களிலிருந்து தாங்கும் சக்தி கொண்டது. ஏனெனில் அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன என  நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின்  அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையான உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement