• Apr 26 2024

'சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை' பெப்ரவரி 4 மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு- செல்வம் எம்.பி உறுதி!

Tamil nila / Jan 28th 2023, 5:52 pm
image

Advertisement

நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்விற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திலே பிரிந்து சென்று வரும் தேர்தலிலே பங்கு பற்றலாம் என முடிவெடுக்கின்றார்கள்.  மட்டக்களப்பில் வடக்கு கிழக்கிலே தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் போராடுகின்றனர் அதே வேளை முல்லைதீவில் நான்கு நாட்களாக விடுதலைப்புலி போராளி மாதவன் வேலுப்பிள்ளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்றார்.  இந்த இரண்டு போராட்டங்களும் தமிழரசு கட்சியினுடைய காதுகளில்  எடுபடவில்லை.


நாங்கள் அந்த போராளியை சென்று பார்வையிட போது சில கோரிக்கைகளினை எழுதி அதை நடைமுறைபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை  கைவிடுவேன் எனக்கூறியிருந்தார். குறிப்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்.விக்கினேஸ்வரன் ஐயாவும் கையொப்பமிட்டு உண்ணா நோம்பினை முடிவுக்கு கொண்டு வந்தார். 


எமக்கு வழிகாட்டியாக இருந்த தமிழரசு கட்சி ஒரு சிறிய தேர்தலிலே பிரிந்து செல்வதாக முடிவெடுப்பது சுமந்திரன் போன்றோரின் உள்நுழைவு தான் காரணம். இதனாலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விலகிச்சென்றார்கள்.  அதனை தொடர்ந்து பிரேமசந்திரனின் கட்சியும் விலகி சென்றது. ஆமை புகுந்த வீடு விளங்காது. 


இவ்வாறாக அவர் வந்த பின்னர் வாக்காளர்களும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறைந்தது. இன்று 10 ஆக இருக்கின்றோம். 3 கட்சிகள். முன்னர் 6 காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் வெளியில் நாங்கள் 6 காட்சிகளாக இயங்கினோம். 


தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை உள்ளெடுக்க விரும்பவில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டார். சுமந்திரன் மறுத்தார். அந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். எமக்கும் சில காட்சிகள் மேல் கோபமுள்ளது. அதனை உடனடியாக தீர்க்க முடியாது என்று சொன்னார்கள். 


அவ்வாறிருந்தும் நங்கள் இறுதியாக ஜனாதிபதி பேச்சு  வார்த்தைகளை ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக இவ் 6 கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலொசித்தது தான் சென்றோம். மக்களுடைய தேவைக்காக ஒற்றுமையாக செயற்பட்ட நாங்கள் இந்த தேர்தலுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் எவரால் கொண்டுவரப்பட்டது? 


இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கு மனமார்ந்து சேவையாற்ற வழங்கியதற்கு வணங்குகின்றேன். விடுதலையின் கட்சியாகவே இனி திகழும்.  விடுதலை தலைவனின் அங்கீகாரம் ஊடாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த கட்சிகளின் பெயர்கள் உச்சரிக்கப்படாது. 


தேர்தலின் பின்னர் இணைவோம் என பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வறை இணைவதாயின் எம் 

 குத்து விளக்கு சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டும் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்  இணைந்து கொள்ளலாம் என அறைகூவல் விடுகின்றோம். 


ஒவ்வொரு நிலமும் திணைக்களத்தாலும், முப்படையாலும் அபகரிக்கபடுகின்றது. ஜனாதியிடம் கேட்டால் கட்டளை இடுகின்றார். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. 


பேச்சு வார்த்தை என்பது இப்பொழுது தம் சுயநலத்திற்காக அழைத்து பேசிய பின்னர் பேசிவிட்டோம் என்று சொல்லும் நிலையிலே உள்ளது. அதனால் நாம் ஒன்றாக  சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். காரணம் நிலத்தை அபகரிக்கின்ற,நிலத்தை விடுகின்ற சூழலை கேட்டோம் அத்தோடு அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் கிடைக்கவில்லை. 


தென்னிலங்கையில் எம் நிலங்களை பறிக்கின்ற நிலை மாறும் ஒற்றுமையின் சக்தியாக செயற்படக்கூடிய 

வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும். வரும் 4 ஆம் திகதி சுதந்திரதின விழாவிலே அந்த சுத்தந்திரம் எமக்கில்லை என சொல்லுகின்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள  பல்கலைக்கழக மாணவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உங்களுடன் பயணிப்போம்  என்பதை செய்தியாக கூறுகின்றோம். 


ஆகவே எமது போராட்டம் எதுவானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் நிற்கும். எமது வீர மறவர்களின் கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. மண்ணினதும் மக்களினதும் விடுதலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக அணிதிரண்டு மக்களாக செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

'சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை' பெப்ரவரி 4 மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு- செல்வம் எம்.பி உறுதி நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்விற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திலே பிரிந்து சென்று வரும் தேர்தலிலே பங்கு பற்றலாம் என முடிவெடுக்கின்றார்கள்.  மட்டக்களப்பில் வடக்கு கிழக்கிலே தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் போராடுகின்றனர் அதே வேளை முல்லைதீவில் நான்கு நாட்களாக விடுதலைப்புலி போராளி மாதவன் வேலுப்பிள்ளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்றார்.  இந்த இரண்டு போராட்டங்களும் தமிழரசு கட்சியினுடைய காதுகளில்  எடுபடவில்லை.நாங்கள் அந்த போராளியை சென்று பார்வையிட போது சில கோரிக்கைகளினை எழுதி அதை நடைமுறைபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை  கைவிடுவேன் எனக்கூறியிருந்தார். குறிப்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்.விக்கினேஸ்வரன் ஐயாவும் கையொப்பமிட்டு உண்ணா நோம்பினை முடிவுக்கு கொண்டு வந்தார். எமக்கு வழிகாட்டியாக இருந்த தமிழரசு கட்சி ஒரு சிறிய தேர்தலிலே பிரிந்து செல்வதாக முடிவெடுப்பது சுமந்திரன் போன்றோரின் உள்நுழைவு தான் காரணம். இதனாலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விலகிச்சென்றார்கள்.  அதனை தொடர்ந்து பிரேமசந்திரனின் கட்சியும் விலகி சென்றது. ஆமை புகுந்த வீடு விளங்காது. இவ்வாறாக அவர் வந்த பின்னர் வாக்காளர்களும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறைந்தது. இன்று 10 ஆக இருக்கின்றோம். 3 கட்சிகள். முன்னர் 6 காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் வெளியில் நாங்கள் 6 காட்சிகளாக இயங்கினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை உள்ளெடுக்க விரும்பவில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டார். சுமந்திரன் மறுத்தார். அந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். எமக்கும் சில காட்சிகள் மேல் கோபமுள்ளது. அதனை உடனடியாக தீர்க்க முடியாது என்று சொன்னார்கள். அவ்வாறிருந்தும் நங்கள் இறுதியாக ஜனாதிபதி பேச்சு  வார்த்தைகளை ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக இவ் 6 கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலொசித்தது தான் சென்றோம். மக்களுடைய தேவைக்காக ஒற்றுமையாக செயற்பட்ட நாங்கள் இந்த தேர்தலுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் எவரால் கொண்டுவரப்பட்டது இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கு மனமார்ந்து சேவையாற்ற வழங்கியதற்கு வணங்குகின்றேன். விடுதலையின் கட்சியாகவே இனி திகழும்.  விடுதலை தலைவனின் அங்கீகாரம் ஊடாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த கட்சிகளின் பெயர்கள் உச்சரிக்கப்படாது. தேர்தலின் பின்னர் இணைவோம் என பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வறை இணைவதாயின் எம்  குத்து விளக்கு சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டும் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்  இணைந்து கொள்ளலாம் என அறைகூவல் விடுகின்றோம். ஒவ்வொரு நிலமும் திணைக்களத்தாலும், முப்படையாலும் அபகரிக்கபடுகின்றது. ஜனாதியிடம் கேட்டால் கட்டளை இடுகின்றார். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. பேச்சு வார்த்தை என்பது இப்பொழுது தம் சுயநலத்திற்காக அழைத்து பேசிய பின்னர் பேசிவிட்டோம் என்று சொல்லும் நிலையிலே உள்ளது. அதனால் நாம் ஒன்றாக  சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். காரணம் நிலத்தை அபகரிக்கின்ற,நிலத்தை விடுகின்ற சூழலை கேட்டோம் அத்தோடு அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் கிடைக்கவில்லை. தென்னிலங்கையில் எம் நிலங்களை பறிக்கின்ற நிலை மாறும் ஒற்றுமையின் சக்தியாக செயற்படக்கூடிய வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும். வரும் 4 ஆம் திகதி சுதந்திரதின விழாவிலே அந்த சுத்தந்திரம் எமக்கில்லை என சொல்லுகின்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள  பல்கலைக்கழக மாணவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உங்களுடன் பயணிப்போம்  என்பதை செய்தியாக கூறுகின்றோம். ஆகவே எமது போராட்டம் எதுவானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் நிற்கும். எமது வீர மறவர்களின் கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. மண்ணினதும் மக்களினதும் விடுதலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக அணிதிரண்டு மக்களாக செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement