• Sep 30 2024

அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டுமென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்..! samugammedia

Tamil nila / Dec 14th 2023, 8:12 pm
image

Advertisement

யாழ், மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த, போராட்டம் நவம்பர் 27ஆம் திகதி கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் நுழைந்து இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது.



பாடசாலைக்கு, முன்பாக இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த போராட்டம் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இடம்பெற்றது.

அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்கள் சுமூகமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டுமென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம். samugammedia யாழ், மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.குறித்த, போராட்டம் நவம்பர் 27ஆம் திகதி கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் நுழைந்து இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது.பாடசாலைக்கு, முன்பாக இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த போராட்டம் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இடம்பெற்றது.அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்கள் சுமூகமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.மேலும், தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement