செறிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த தடையினை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மதுபான உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் சமர்ப்பித்த இரண்டு மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.