தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் இதய நோயால் சரிந்து விழுந்ததாக தாய்லாந்து அரச அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னன் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகித்தியபா நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை பாங்காக்கின் வடகிழக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் போது சரிந்து விழுந்ததாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
44 வயதான அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஹெலிகொப்டர் மூலம் பாங்காக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரண்மனை நேற்றிரவு அவரது உடல்நிலையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நிலையானது என்று விபரித்தது.