தாய்லாந்தும் இலங்கையும் இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2024 தொடக்கத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோதிமா லெம்சவாஸ்திகுல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தாய்லாந்து மற்றும் இலங்கை அதிகாரிகள் எதிர்வரும் 27-29 திகதிகளில் வர்த்தக உடன்படிக்கைக்கான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக சந்திக்க உள்ளதாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் இறுதியான சில முடிவுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சோதிமா லெம்சவாஸ்திகுல் கூறியுள்ளார்.
மேலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒப்பந்தம் இலங்கையில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தும் இலங்கையும் இருதரப்பு தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் samugammedia தாய்லாந்தும் இலங்கையும் இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2024 தொடக்கத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோதிமா லெம்சவாஸ்திகுல் தெரிவித்துள்ளார்.குறிப்பாக தாய்லாந்து மற்றும் இலங்கை அதிகாரிகள் எதிர்வரும் 27-29 திகதிகளில் வர்த்தக உடன்படிக்கைக்கான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக சந்திக்க உள்ளதாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.பேச்சுவார்த்தைகள் இறுதியான சில முடிவுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சோதிமா லெம்சவாஸ்திகுல் கூறியுள்ளார்.மேலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒப்பந்தம் இலங்கையில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.