தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம்(19) இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில், அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு பொதுச்சுடரேற்றப்பட்டதுடன் தொடர்ந்து மலரஞ்சலியும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.