நேற்றையதினம் (28) மாலை 07.30 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில், அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.