தேனீ நகரின் மையப்பகுதியில் சுந்தரம் தியேட்டர் செல்லும் சாலையில் பெரிய குளம் தொகுதி சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் சரவணகுமாரின் அலுவலகமும், அருகே கிராம சேவையாளரின் அலுவலகமும் உண்டு.
இவ்வாறான ஒரு பகுதியிலே வயது சென்ற தம்பதிகளினை வீட்டிற்குள்ளே இருளில் அடைத்து வைத்த கொடுமை ஒன்று அரங்கேறியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முதியவரான பெரியசாமி என்பவர் தனது மனைவியான பார்வதியுடன் வசித்து வருகின்றார். இவர்களது வீட்டிற்கருகே காமாச்சி என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்த இரு வீடுகளிற்குமிடையில், 3 அடி கொண்ட பாதை தொடர்பான பிரைச்சினை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
அதில் இரண்டரை நீளமான பாதை தமக்கு சொந்தமென காமாச்சி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் பெரியசாமியோ வயதான காரணத்தினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வழக்கிற்கு ஆஜர் ஆகாமல் இருந்துள்ளார்.
இதனால் காமாட்சிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்த போதும் மீண்டும் பாதையினை ஒதுக்கி தருமாறு காமாச்சி நீஎதிமன்றினை அணுகியதால், நீதிமன்றம் வாழக்கறிஞர் கொண்ட குழுவினை அனுப்பி வைத்துள்ளது.
அதன் பின்னர் காமாச்சி மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார் . வாழக்கறிஞருடன் வந்த காமாச்சி
இரண்டரை அடி நீளமுள்ள பாதையினை பெரியசாமியும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியில் வர முடியாதவாறு சவுக்கு கம்புகள் மற்றும் தடிகளினை வைத்து அடைந்துள்ளார்.
இதனால் அந்த வயோதிப தம்பதி மல்லிகை பொருட்கள் கூட வாங்க கடைக்கு செல்ல முடியாது பட்டினியில் வாடியுள்ளனர்.
அத்தோடு காமாச்சி தனது வீட்டில் மேல் பகுதியில் வேலை என கூறி பெரியசாமி வீடிற்கு செல்லும் மின் இணைப்பினையும் துண்டித்துள்ளார்.
அவர்களினை மீட்பதற்கான முயற்சிகளை கிரமாக நிர்வாக அலுவலமோ அல்லது வேறு யாரும் அயலவர்களோ மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நேர்காணல் எடுப்பதற்காக சென்ற ஊடகம் ஒன்றுடனும் காமாட்சியும் வழக்கறிஞர்களும்
தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு படி காமாட்சிக்கு பாதை சொந்தமாயினும் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு வயதான தம்பதியினை அடைத்தமையானது நியாயமற்றதாக பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
கொடூரத்தின் உச்சக்கட்டம்- வயோதிப தம்பதிகளை வீட்டில் வைத்தடைத்த பக்கத்து வீடு- உணவு நீரின்றி தவிப்பு SamugamMedia தேனீ நகரின் மையப்பகுதியில் சுந்தரம் தியேட்டர் செல்லும் சாலையில் பெரிய குளம் தொகுதி சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் சரவணகுமாரின் அலுவலகமும், அருகே கிராம சேவையாளரின் அலுவலகமும் உண்டு. இவ்வாறான ஒரு பகுதியிலே வயது சென்ற தம்பதிகளினை வீட்டிற்குள்ளே இருளில் அடைத்து வைத்த கொடுமை ஒன்று அரங்கேறியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முதியவரான பெரியசாமி என்பவர் தனது மனைவியான பார்வதியுடன் வசித்து வருகின்றார். இவர்களது வீட்டிற்கருகே காமாச்சி என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த இரு வீடுகளிற்குமிடையில், 3 அடி கொண்ட பாதை தொடர்பான பிரைச்சினை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதில் இரண்டரை நீளமான பாதை தமக்கு சொந்தமென காமாச்சி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் பெரியசாமியோ வயதான காரணத்தினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வழக்கிற்கு ஆஜர் ஆகாமல் இருந்துள்ளார். இதனால் காமாட்சிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்த போதும் மீண்டும் பாதையினை ஒதுக்கி தருமாறு காமாச்சி நீஎதிமன்றினை அணுகியதால், நீதிமன்றம் வாழக்கறிஞர் கொண்ட குழுவினை அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னர் காமாச்சி மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார் . வாழக்கறிஞருடன் வந்த காமாச்சி இரண்டரை அடி நீளமுள்ள பாதையினை பெரியசாமியும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியில் வர முடியாதவாறு சவுக்கு கம்புகள் மற்றும் தடிகளினை வைத்து அடைந்துள்ளார். இதனால் அந்த வயோதிப தம்பதி மல்லிகை பொருட்கள் கூட வாங்க கடைக்கு செல்ல முடியாது பட்டினியில் வாடியுள்ளனர். அத்தோடு காமாச்சி தனது வீட்டில் மேல் பகுதியில் வேலை என கூறி பெரியசாமி வீடிற்கு செல்லும் மின் இணைப்பினையும் துண்டித்துள்ளார். அவர்களினை மீட்பதற்கான முயற்சிகளை கிரமாக நிர்வாக அலுவலமோ அல்லது வேறு யாரும் அயலவர்களோ மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன் நேர்காணல் எடுப்பதற்காக சென்ற ஊடகம் ஒன்றுடனும் காமாட்சியும் வழக்கறிஞர்களும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு படி காமாட்சிக்கு பாதை சொந்தமாயினும் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு வயதான தம்பதியினை அடைத்தமையானது நியாயமற்றதாக பலராலும் பேசப்பட்டு வருகின்றது.