• May 17 2024

யாழில் வெடித்து சிதறிய நாட்டுக்குண்டு - ஆவா குழுவினர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! samugammedia

Chithra / Apr 19th 2023, 1:02 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்படிருந்த நிலையில் மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும், கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இன்று (19.04.2023) அதிகாலை மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்தில் பண விவகாரம் பற்றி எழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் காரொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்றுள்ளார். 

அவ்வாறு காசோலையைப் பெற்றுக்கொண்ட பெண், யாழில் உள்ள ஆவா குழுவினரிடம் அந்த காசோலையைக் கொடுத்தே பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காசோலையைப் பெற்றுக்கொண்ட குழுவினர், அதனை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த காசோலை பணம் பெறமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட குழுவினர், ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே, தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தினை திரும்ப கையளிக்கம் வரை, பிரான்சில் பணம் பெற்றுக்கொண்ட நபரும், குறித்த குழுவினருக்கு காசோலையை வழங்கிய பெண்ணும் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரின் மருமகன் என்பதால், கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வரை உரிமையாளரின் குடும்பத்தினரையும் நின்மதியாக வாழ விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறித்த கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.


யாழில் வெடித்து சிதறிய நாட்டுக்குண்டு - ஆவா குழுவினர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை samugammedia யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்படிருந்த நிலையில் மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும், கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸார் இன்று (19.04.2023) அதிகாலை மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த கடித்தில் பண விவகாரம் பற்றி எழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் நேற்று கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் காரொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு காசோலையைப் பெற்றுக்கொண்ட பெண், யாழில் உள்ள ஆவா குழுவினரிடம் அந்த காசோலையைக் கொடுத்தே பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.இவ்வாறான நிலையில், காசோலையைப் பெற்றுக்கொண்ட குழுவினர், அதனை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த காசோலை பணம் பெறமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட குழுவினர், ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.ஆகவே, தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தினை திரும்ப கையளிக்கம் வரை, பிரான்சில் பணம் பெற்றுக்கொண்ட நபரும், குறித்த குழுவினருக்கு காசோலையை வழங்கிய பெண்ணும் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதேவேளை பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரின் மருமகன் என்பதால், கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வரை உரிமையாளரின் குடும்பத்தினரையும் நின்மதியாக வாழ விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறித்த கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement