தமிழகத்தில், கணவன் இறந்த சோகத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாய தொழிலாளியான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11) ஆகிய மகள்களும், விக்னேஸ்வரன் (3) என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டிஸ்வரி, இன்று தங்களுக்கு சொந்தமான கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் இறந்த சோகம். மூன்று பிள்ளைகளுடன் தாய் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. samugammedia தமிழகத்தில், கணவன் இறந்த சோகத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாய தொழிலாளியான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11) ஆகிய மகள்களும், விக்னேஸ்வரன் (3) என்ற மகனும் இருந்தனர்.இந்நிலையில், ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டிஸ்வரி, இன்று தங்களுக்கு சொந்தமான கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.