மூதூர் பஹ்ரியா நகர்(வட்டம்) என்கின்ற இடத்தை சேர்த்த 3 பிள்ளையின் தந்தை தோணியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை மூதூர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கரைக்கு வராத நிலையில் அவர் சென்ற தோணியை மாத்திரம் கடலுக்குச் சென்ற ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
தொழிலுக்கு சென்ற மீனவரை இன்னும் காணவில்லை.
குறித்த மீனவரை தேடும் பணி இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றது.