தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழாவுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் கரணவாய் வடமேற்கில் நேற்று நடந்துள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் நேற்று செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய போது வீடு உடைத்துத் திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபா பணம், பதினொன்றரைப் பவுண் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் தேருக்கு சென்ற குடும்பம். வீட்டில் இறங்கிய மர்ம நபர்கள்.samugammedia தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழாவுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கரணவாய் வடமேற்கில் நேற்று நடந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நேற்று செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய போது வீடு உடைத்துத் திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபா பணம், பதினொன்றரைப் பவுண் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.