• Apr 27 2024

காதல் ஜோடியை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய தந்தை...!துணை நின்ற குடும்ப பெண்கள்...!samugammedia

Sharmi / Jun 20th 2023, 11:34 am
image

Advertisement

தந்தை ஒருவர் மகளையும், காதலனையும் சுட்டுப் படுகொலை செய்த பின்னர் கல்லில்  கட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் 18 வயதான ஷிவானி என்பவரும், பாலுபுரா கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான  ராதேஷ்யாம் என்ற வாலிபரும் காதலித்துள்ளனர்.

 இருவரும் ஒரே சாதியை  சேர்ந்த போதிலும் அவர்களது  காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் காதல் ஜோடிகள் மாயமாகியமையால் ராதேஷ்யாமின் குடும்பத்தினர்  ஷிவானியின் குடும்பத்தினரே கொலை செய்திருப்பார்கள் என்று குற்றம்சாட்டி  பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.     

ஆயினும், காதல் ஜோடி வேறு ஊருக்கு சென்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில்  கூறிய பொலிஸார்  வாலிபரின் குடும்பத்தின்  வற்புறுத்தலால் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.

அதன் போது, ஷிவானியின் தந்தை  கடந்த 3 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு இருவரையும் படுகொலை செய்தபின்னர்  அன்று இரவு தானும், தமது குடும்ப பெண்களும் சேர்ந்து இருவரினதும்  உடல்களுடன் கனமான கற்களை கட்டி, முதலைகள் நிறைந்த சம்பால் ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினரையும், நீச்சல் வீரர்களையும் பொலிஸார் ஈடுபடுத்தியுள்ளனர்.

காதல் ஜோடியின் உடல்கள் கிடைத்தால் மட்டுமே  ஒரு முடிவுக்கு வரமுடியும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பரிதாபமாக காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.

காதல் ஜோடியை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய தந்தை.துணை நின்ற குடும்ப பெண்கள்.samugammedia தந்தை ஒருவர் மகளையும், காதலனையும் சுட்டுப் படுகொலை செய்த பின்னர் கல்லில்  கட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் 18 வயதான ஷிவானி என்பவரும், பாலுபுரா கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான  ராதேஷ்யாம் என்ற வாலிபரும் காதலித்துள்ளனர்.  இருவரும் ஒரே சாதியை  சேர்ந்த போதிலும் அவர்களது  காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் காதல் ஜோடிகள் மாயமாகியமையால் ராதேஷ்யாமின் குடும்பத்தினர்  ஷிவானியின் குடும்பத்தினரே கொலை செய்திருப்பார்கள் என்று குற்றம்சாட்டி  பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.     ஆயினும், காதல் ஜோடி வேறு ஊருக்கு சென்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில்  கூறிய பொலிஸார்  வாலிபரின் குடும்பத்தின்  வற்புறுத்தலால் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர். அதன் போது, ஷிவானியின் தந்தை  கடந்த 3 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு இருவரையும் படுகொலை செய்தபின்னர்  அன்று இரவு தானும், தமது குடும்ப பெண்களும் சேர்ந்து இருவரினதும்  உடல்களுடன் கனமான கற்களை கட்டி, முதலைகள் நிறைந்த சம்பால் ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினரையும், நீச்சல் வீரர்களையும் பொலிஸார் ஈடுபடுத்தியுள்ளனர். காதல் ஜோடியின் உடல்கள் கிடைத்தால் மட்டுமே  ஒரு முடிவுக்கு வரமுடியும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பரிதாபமாக காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement