உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடம் பணம் உட்பட ஏனைய சிறப்புரிமைகள், விசேட சலுகைகளை முன்வைத்து அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை அரசாங்கம் இன்னும் உணரவில்லை.
மேலும் சில மாதங்கள் சென்ற பின்னர் அரசாங்கத்துக்கு இந்த நிலைமை மேலும் மோசமடையும்.
5 ஆண்டுகள் ஆட்சிபுரிய வேண்டுமெனில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனில், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நினைத்தளவு வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களும் செல்ல இடமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் ஒரு செய்தியை வழங்கியிருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
அரசாங்கம் பலவீனமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நாட்டுக்கான மாற்று திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால் அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடியவாறான புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு காணப்படுகிறது.
இந்நிலையில் அரசாங்கம் ஏனைய கட்சிகளிள் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடம் விசேட சலுகைகளை முன்வைத்து பேரம் பேசும் அரசாங்கம் - அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடம் பணம் உட்பட ஏனைய சிறப்புரிமைகள், விசேட சலுகைகளை முன்வைத்து அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை அரசாங்கம் இன்னும் உணரவில்லை. மேலும் சில மாதங்கள் சென்ற பின்னர் அரசாங்கத்துக்கு இந்த நிலைமை மேலும் மோசமடையும்.5 ஆண்டுகள் ஆட்சிபுரிய வேண்டுமெனில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனில், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.குறிப்பாக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நினைத்தளவு வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களும் செல்ல இடமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் ஒரு செய்தியை வழங்கியிருக்கின்றனர்.அந்த வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். அரசாங்கம் பலவீனமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நாட்டுக்கான மாற்று திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.5 ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால் அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடியவாறான புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு காணப்படுகிறது.இந்நிலையில் அரசாங்கம் ஏனைய கட்சிகளிள் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். என்றார்.