வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு சென்ற அலெக்ஸ் மரணம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் இன்று 30 ற்கும் மேற்பட்ட பொலிஸார் அடையாள அணிவகுப்பிற்காக மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.
எனினும் பிராதான சாட்சியான அலெக்ஸுடன் கைது செய்யப்பட்ட நபர் சமூகமளிக்காத காரணத்தால் அடையாள அணிவகுப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைக்கு 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அத்தோடு தொடர் மரண விசாரணை நாளையதினம் 2.30 மணிக்கு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.