• Sep 19 2024

ஆனோல்ட்டின் சண்டித்தனத்தை தட்டிக் கேட்காத தலைமை; விரைவில் நடவடிக்கை..! – சிவசேனை அமைப்பு கண்டனம் samugammedia

Chithra / May 14th 2023, 12:17 pm
image

Advertisement

தமிழரசுக்கட்சியில் இருந்து சைவர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையை யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் முன்னெடுப்பதாக சிவசேனை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, கட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன் மீது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தாக்குதல் நடத்தியுள்ளார்.    

மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று கட்சியின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னரே யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் தாக்கியிருந்தாக சிவசேனை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

சிவசேனை அமைப்பின் உறுப்பினரான உனக்கு இங்கு என்ன வேலை இங்கு கிறிஸ்தவ சட்டம் தான் என்று கூறியே யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்டா தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழரசுக்கட்சியில் சைவ சமத்தவர்கள் எவரும் இல்லை எனவும் அதேபோன்று யாழ் மாவட்த்திலுள்ள தமிழரசுக் கட்சியலும் சைவ சமயத்தை சேர்ந்த உறுப்பினர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக சிவNனை அமைப்பு குற்றம் சுமத்துகின்றது.

கிறிஸ்தவ சமயத்திற்கு தாம் எதிரானவர்கள் இல்லை என தெரிவித்துள்ள சிவசேனை அமைப்பினர் மதமாற்றத்திற்கு எதிரானவர்கள் என்றும் சிவசேனை அமைப்பின் உறுப்பினர் த.பிரமேந்திரராஜா குறிப்பிட்டுள்ளார்.


ஆனோல்ட்டின் சண்டித்தனத்தை தட்டிக் கேட்காத தலைமை; விரைவில் நடவடிக்கை. – சிவசேனை அமைப்பு கண்டனம் samugammedia தமிழரசுக்கட்சியில் இருந்து சைவர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையை யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் முன்னெடுப்பதாக சிவசேனை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, கட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன் மீது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தாக்குதல் நடத்தியுள்ளார்.    மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று கட்சியின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னரே யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் தாக்கியிருந்தாக சிவசேனை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.சிவசேனை அமைப்பின் உறுப்பினரான உனக்கு இங்கு என்ன வேலை இங்கு கிறிஸ்தவ சட்டம் தான் என்று கூறியே யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்டா தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பாக இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழரசுக்கட்சியில் சைவ சமத்தவர்கள் எவரும் இல்லை எனவும் அதேபோன்று யாழ் மாவட்த்திலுள்ள தமிழரசுக் கட்சியலும் சைவ சமயத்தை சேர்ந்த உறுப்பினர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக சிவNனை அமைப்பு குற்றம் சுமத்துகின்றது.கிறிஸ்தவ சமயத்திற்கு தாம் எதிரானவர்கள் இல்லை என தெரிவித்துள்ள சிவசேனை அமைப்பினர் மதமாற்றத்திற்கு எதிரானவர்கள் என்றும் சிவசேனை அமைப்பின் உறுப்பினர் த.பிரமேந்திரராஜா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement