டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை குத்திகள் பளை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை குத்திகள் கடத்தப்படுவதாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கு அமைவாக பளையில் சோதனை மேற்கொண்ட பொலிசார் குறித்த டிப்பர் வாகனத்திலிருந்து முதிரை குத்திகளை மீட்டதுடன் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 28 முதிரை குத்திகளும் சுமார் 5 லட்சம் பெறுமதியானது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.