கண்டி - கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர அதிபர பிரதேசத்தில் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெனிக்கும்புர, அதிபர பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரால் இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை இடம்பெற்ற கொலை. பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது samugammedia கண்டி - கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர அதிபர பிரதேசத்தில் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெனிக்கும்புர, அதிபர பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரால் இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சந்தேகநபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.