க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரம் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு எழுத்தாணை உத்தரவிடுமாறு கோரிய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.