இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம்(03) கடமையின் நிமித்தம் சந்தேக நபர் ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்காக கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரனைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து சந்தேக நபரால் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இராமநாதபுரம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரை அழைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி.samugammedia இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம்(03) கடமையின் நிமித்தம் சந்தேக நபர் ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்காக கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரனைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து சந்தேக நபரால் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இராமநாதபுரம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.