வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தவராசா கலையரசன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்கிக்கொள்ளாத பலர் வெளிநாடுகளுக்கு சென்று தமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறானவர்கள் நாட்டுக்கு வரும்போது தமது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்கும்போது பல்வேறு சிரமங்களையும், கால தாமத்தையும் எதிர்நோக்குகின்றனர்.
எனவே அவர்களது தேவையை இலகுபடுத்துவது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தலையாய கடமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.