• May 20 2024

மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு தனி இடம் உண்டு; தேர்தலில் நிச்சயம் வெற்றி! – மொட்டு நம்பிக்கை

Chithra / Jan 31st 2023, 10:09 am
image

Advertisement

மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் தங்களுக்கு இல்லை எனவும், வெற்றி, தோல்வி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு தனி இடம் உண்டு; தேர்தலில் நிச்சயம் வெற்றி – மொட்டு நம்பிக்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் தங்களுக்கு இல்லை எனவும், வெற்றி, தோல்வி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement