• May 19 2024

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட நிலைமை நாளை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும்..! சுகாஷ் எச்சரிக்கை samugammedia

Chithra / Oct 4th 2023, 12:31 pm
image

Advertisement


முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கோருகின்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்களும் எமது மக்கள் உறுப்பினர்கள் தொண்டர்களோடு திரண்டு இருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவத்துள்ளார் .

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு நீதிபதி பாதிக்கப்பட்டு இருக்கின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடியாட்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அவருடைய உரிமைகள் உத்தரவாதபடுத்தப்பட வேண்டும். இந்த இடத்திலாவது சிங்கள சகோதரிகளும் புத்தியீவிகளும் சிவில் அமைப்புக்களும் தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார் 

மேலும் இன்று முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட நிலமை நாளை உங்களுடைய சிங்கள நீதிபதிகளுக்கு ஏற்படும். அப்போது போராடி பிரயோசனம் கிடையாது. ஏனென்றால் அந்த நேரத்தில் சீனாவினதோ அல்லது வேறு நாடுகளினதோ காலணித்துவமாக எமது நாடு மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சிவில் அமைப்புக்களும் சிங்கள மக்களும் தமிழ் மக்களினுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அபிலாசைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கிடைக்க வேண்டி எம்மோடு இணைந்து குரல்கொடுக்க வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் ஜக்கிய நாடுகள் சபை போன பன்னாட்டு மன்றங்கள் இனியும் காலதாமதமின்றி ஈழத்தில் இடம் பெற்ற தமிழ் ஈழ விடுதலைக்கு ஒரு விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.

இனியும் ஆதாரங்கள் இல்லை. சாட்சியங்கள் இல்லை என எம்மவர்கள் யாரும் சொல்லுவார்களாக இருந்தால் மக்கள் அவர்களுக்கு ஒரு நல்ல பதில் சொல்லுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

ஏனென்றால் இன்று ஒரு நீதிபதியே நாட்டில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் சாதாரண மக்களுடைய நிலைமை என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்


முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட நிலைமை நாளை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும். சுகாஷ் எச்சரிக்கை samugammedia முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கோருகின்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்களும் எமது மக்கள் உறுப்பினர்கள் தொண்டர்களோடு திரண்டு இருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவத்துள்ளார் .அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதிபதி பாதிக்கப்பட்டு இருக்கின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடியாட்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.அவருடைய உரிமைகள் உத்தரவாதபடுத்தப்பட வேண்டும். இந்த இடத்திலாவது சிங்கள சகோதரிகளும் புத்தியீவிகளும் சிவில் அமைப்புக்களும் தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார் மேலும் இன்று முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட நிலமை நாளை உங்களுடைய சிங்கள நீதிபதிகளுக்கு ஏற்படும். அப்போது போராடி பிரயோசனம் கிடையாது. ஏனென்றால் அந்த நேரத்தில் சீனாவினதோ அல்லது வேறு நாடுகளினதோ காலணித்துவமாக எமது நாடு மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.மேலும் சிவில் அமைப்புக்களும் சிங்கள மக்களும் தமிழ் மக்களினுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அபிலாசைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கிடைக்க வேண்டி எம்மோடு இணைந்து குரல்கொடுக்க வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஜக்கிய நாடுகள் சபை போன பன்னாட்டு மன்றங்கள் இனியும் காலதாமதமின்றி ஈழத்தில் இடம் பெற்ற தமிழ் ஈழ விடுதலைக்கு ஒரு விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.இனியும் ஆதாரங்கள் இல்லை. சாட்சியங்கள் இல்லை என எம்மவர்கள் யாரும் சொல்லுவார்களாக இருந்தால் மக்கள் அவர்களுக்கு ஒரு நல்ல பதில் சொல்லுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் இன்று ஒரு நீதிபதியே நாட்டில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் சாதாரண மக்களுடைய நிலைமை என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement