கம்பளை – ஹேமத்தகம வீதியில் பலத்கமுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 67 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹேமத்தகம நோக்கி பயணித்த வாகனம் 12 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் அவுஸ்திரேலிய பிரஜையான பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது காரின் சாரதி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் வாகனத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.
சாரதி உறங்கியதால் வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.