நாடளாவிய ரீதியில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட
தனியார் பாடசாலைகளில் புத்தாண்டு விடுமுறையின் பின் இன்றைய தினம் கல்வி
நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
அந்தவகையில் யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந் நிலையில் விடுமுறை நிறைவடைந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகளில் கல்விநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.