• Sep 20 2024

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்!

Tamil nila / Jan 15th 2023, 3:39 pm
image

Advertisement

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து முன்னெடுக்கும் போராட்டமானது யாழ். அரசடி பாரதியார் சிலையடி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.




இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். 



தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக நாட்டினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.




ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து முன்னெடுக்கும் போராட்டமானது யாழ். அரசடி பாரதியார் சிலையடி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக நாட்டினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement