கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் வீதியில் விசர் நாயொன்றின் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (14) வெள்ளிக்கிழமை வீதியால் சென்ற சிறுவன் ஒருவன் உட்பட மூவரை விசர் நாய் கடித்ததில், மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள விசர் நாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து, அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.