• May 19 2024

'பாராளுமன்றத்தில் நான் நடந்துகொண்ட விதம் தவறு'...! சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம்..! samugammedia

Sharmi / Nov 23rd 2023, 10:17 am
image

Advertisement

அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் நடந்துகொண்ட விதம் தொடர்பில் வருந்துவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்து, குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது, ​​இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால், அது தொடர்பான கோப்பு பறிக்கப்பட்டது.

இச் சம்பவத்திற்கு அடிப்படையான எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டாரவின் நடத்தை ஆகியவை நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே இவர்கள் இருவருக்கும் தகுந்த தண்டனை வழங்குமாறு சபாநாயகரிடம் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

'பாராளுமன்றத்தில் நான் நடந்துகொண்ட விதம் தவறு'. சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம். samugammedia அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் நடந்துகொண்ட விதம் தொடர்பில் வருந்துவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்து, குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது, ​​இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால், அது தொடர்பான கோப்பு பறிக்கப்பட்டது.இச் சம்பவத்திற்கு அடிப்படையான எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டாரவின் நடத்தை ஆகியவை நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவர்கள் இருவருக்கும் தகுந்த தண்டனை வழங்குமாறு சபாநாயகரிடம் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement