யாழ்.திருநெல்வேலி - பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தகத்தில் தொலைபேசி திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் திருத்தகத்திற்கு வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.
கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து, கண்காணிப்பு கமரா வீடியோ பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு, கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருட்டு தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழில் தொலைபேசி திருத்தகத்தில் நபர் ஒருவரின் மோசமான செயல் காட்டிக்கொடுத்த கேமரா samugammedia யாழ்.திருநெல்வேலி - பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தகத்தில் தொலைபேசி திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் திருத்தகத்திற்கு வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து, கண்காணிப்பு கமரா வீடியோ பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு, கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.இதனையடுத்து திருட்டு தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.