ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் (15) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அமைந்துள்ள, அக்கிராச மன்னனின் உருவச்சிலை முன்றலில், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், அக்கராயன், கந்தபுரம் பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தியாகதீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு.samugammedia ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் (15) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அமைந்துள்ள, அக்கிராச மன்னனின் உருவச்சிலை முன்றலில், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், அக்கராயன், கந்தபுரம் பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.