• Sep 21 2024

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீட்டு விழா இன்று! SamugamMedia

Tamil nila / Mar 11th 2023, 5:29 pm
image

Advertisement

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் எழுதிய "திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் (11.03.2023 ) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது. 




அதில்,  பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா , மலர் வெளியீட்டிற்காக  யாழ் பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர்  என்.சண்முகலிங்கன், முதல் பிரதி வழங்குவதற்காக யாழ் பல்கலை  முன்னாள் கலைப்பீடாதிபதி அ.சண்முகதாஸ் தம்பதிகளும், அறிமுகவுரை வழங்குவதற்காக எந்திரி ச.சந்தோஷன் அவர்களுடன் எந்திரி ச.சர்வராஜா , கலாநிதி. ஆறு.திருமுருகன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 






நிகழ்வில் தலைமையுரையானது  சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகசுடர்  ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளால் ஆற்றப்பட்டது. அத்துடன், ஆசியுரை நல்லூர் திருஞானசம்பந்தர்  ஆதின முதல்வர் சிறீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகளால் வழங்கப்பட்டது.

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீட்டு விழா இன்று SamugamMedia கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் எழுதிய "திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் (11.03.2023 ) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது. அதில்,  பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா , மலர் வெளியீட்டிற்காக  யாழ் பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர்  என்.சண்முகலிங்கன், முதல் பிரதி வழங்குவதற்காக யாழ் பல்கலை  முன்னாள் கலைப்பீடாதிபதி அ.சண்முகதாஸ் தம்பதிகளும், அறிமுகவுரை வழங்குவதற்காக எந்திரி ச.சந்தோஷன் அவர்களுடன் எந்திரி ச.சர்வராஜா , கலாநிதி. ஆறு.திருமுருகன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் தலைமையுரையானது  சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகசுடர்  ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளால் ஆற்றப்பட்டது. அத்துடன், ஆசியுரை நல்லூர் திருஞானசம்பந்தர்  ஆதின முதல்வர் சிறீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகளால் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement