சூழ்ச்சி திட்டங்கள் மூலம் தற்போதைய அரசை கவிழ்க்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இன்றையதினம் பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும் அவர் கூறினார்.
அரசியல் சூழ்ச்சி மூலம் இந்த அரசை கவிழ்க்க முடியாது என்பதால்இ அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிரணிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.